சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயமாக்கி மத்திய அரசு அணை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயம் செய்வது குறித்த உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துவிட்டது. எனினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தற்போது இதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, என்எச்ஏஐ-வுக்கான சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக்குக்கான ஆர்.எஃப்.ஐ.டி ஸ்டிக்கர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் டிசம்பர் 1ம் தேதி வரை மட்டும் தான் இலவசமாக கிடைக்கும்.
அதற்கான ரூ. 150 வைப்பு தொகையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஏற்று கொள்கிறது. இதனால் பொதுமக்கள் ஃபாஸ்டேட்டுக்கான வைப்பு நிதியை செலுத்த வேண்டிய தேவையில்லை.